வளர்ச்சி தண்டனையாகலாமா ?

ஆத்தங்கரை ஓரம் , ஒரு சிறந்த படைப்பு. சிந்தூர் என்ற பழங்குடியினர் கிராமம் வளர்ச்சி என்ற மாயயைக்குள் சிக்கி அழிவதை மனமுறுகி இயற்றியுள்ளார். எந்திர உலகிலிருந்து அந்நியப்பட்டு வாழ்ந்து வந்த சூழல் எவ்வளவு ரம்மியமாகவும், நகரமயமாக்கத்தின் ஒரு சின்ன முகம் எவ்வாறு ரணத்தை உருவாக்குகிறது என்பதும் உணர்த்தப்படுகிறது. அணை, ஒரே நேரத்தில் வளர்ச்சி மற்றும் அழிவின் சின்னமாக காட்சியளிக்கும் முரண் நமது அறிவியல் மற்றும் இயற்கை அறிவின் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. அரசியல் ஆதாயம் தேடும் கதாபாத்திரங்கள் மத்தியில் தனிப்பட்ட வாழ்க்கையை உதறிவிட்டு சமூகத்திற்காக உழைக்கும் இளைஞர்கள் நம்பிக்கை ஊட்டுகிறார்கள். அரசு கட்டமைப்பிற்குள் இருந்து கொண்டு அரசையே எதிர்க்கும் துணிச்சலும் நேர்மையும் நிறைந்த அதிகாரி சுதிர் இப்பொறுப்பிற்கு வந்து சேவை செய்ய விரும்பும் பலருக்கும் முன்னுதாரனம். சர்தார் சரோவர் அணை போராட்டத்தை நினைவூட்டுகிறது இவ்விலக்கியம். நேர்மையான போராட்டத்ததையும் இயற்கையை உயிருக்கு மேலாக போற்றும் பழங்குடியினரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆவண இலக்கியமாகத் திகழ்கிறது இப்புதினம். "விஞ்ஞானம் என்...